உடுமலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் - முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

உடுமலையில் நடந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவாக வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.



உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை வெங்கட கிருஷ்ணா ரோட்டில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.



கூட்டத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார்.

உடுமலை நகராட்சி பொன்விழா ஆண்டை முன்னிட்டு 50 கோடி நிதி ஒதுக்கினார். கால்நடை பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி அமைக்க 235 கோடி நிதி ஒதுக்கியது உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் உடுமலைக்கு அதிமுக அரசு செய்துள்ளது.

ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு பணிகளை மெத்தனமாக செய்து வருகிறது, என்றார்.



நிகழ்வில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், மாவட்ட சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...