கோவையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டு அகற்றம்!

கோவையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டை, அறுவை சிகிச்சை இல்லாமல் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றினர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டை, மருத்துவர்கள் அகற்றினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த ஏழு மாத ஆண் குழந்தை ஒன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் குழந்தையின் பெற்றோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்து மருத்துவர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காது, மூக்கு, தொண்டை சிறப்பு பிரிவு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்தனர். மேலும் குழாய் மூலமாக கருவியை செலுத்தி சுவாச குழாயில் சோதனை செய்தபோது குழந்தையின் சுவாசக் குழாயில் பிளாஸ்டிக் துண்டு சிக்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக தலைமை மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் பிளாஸ்டிக் துண்டை பத்திரமாக அகற்றினர். மேலும் பிளாஸ்டிக் துண்டு அகற்றப்படாமல் இருந்திருந்தால் நேரடியாக அது குழந்தையின் நுரையீரலுக்கு சென்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு உடனடியான சிகிச்சை மேற்கொண்டு பிளாஸ்டிக் துண்டுகளை அகற்றிய மருத்துவர்களை கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...