கோவையில் வீடு புகுந்து கொள்ளை - குற்றவாளி குண்டாசில் கைது

கோவையில் வீடு புகுந்து கொள்ளையடித்த வாலிபரை மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.


கோவை: காரமடை அருகே வீட்டில் கொள்ளையடித்தவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதாகத் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் (32), என்பவரை போலீசார் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர்.

பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதகமாகச் செயல்பட்டதாக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன், சுரேஷை குண்டர் தரப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதை அடுத்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அவருக்கு வழங்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...