'வேலை, சம்பளம் என்பதை தாண்டி மனிதத்தையும், மனிதநேயத்தையும் படிக்க வேண்டும்..!' - கோவையில் எம்பி திருமாவளவன் அறிவுரை

படிக்காமல் கூட வேலை வாய்ப்பு மற்றும் சம்பாதிக்க முடியும். ஆனால் நாகரீகத்தை வளர்த்துக் கொள்ளக் கல்வி முக்கியம் என்று கோவையில் நடந்த தனியார் கல்லூரி விழாவில் விசிக எம்பி தொல் திருமாவளவன் பேச்சு.


கோவை: மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.

கோவை மதுக்கரை பகுதியில் உள்ள நைட்டிங்கேல் தனியார் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்று செவிலியர் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கினர்.



இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தொல் திருமாவளவன், பெரியார் பிறந்து நூறு ஆண்டுகள் வாழ்ந்த இம்மண்ணில் இறுதி மூச்சு வரையில் பாடுபட்டும் கூட உளவியல் நிலவுகிறது எனச் சொன்னால், படித்து என்ன பயன்? பேராசிரியர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் இருந்து என்ன பயன்? மனித நேயத்தை உணராதவன் படித்து என்ன பொருள்? என்ற கேள்வி தான் எழுகிறது.

வேலை, சம்பளம் என எதிர்பார்ப்பது சரிதான், ஆனால் அதனைத் தாண்டி மனிதத்தையும் மனித நேயத்தையும் படிக்க வேண்டும். கல்வி பெற மனித உறவுகள் மேம்பட வேண்டும், சகோதரத்துவத்தை வளர்க்கப் பயன்பட்டால் தான் அது கல்வி, படிக்காமல் கூட வேலை வாய்ப்பை பெற முடியும், சம்பாதிக்க முடியும்.

நாகரீகத்தை வளர்த்து கொள்ள தான் கல்வி தேவை, மனித நேயத்தைப் பெருக்கி கொள்ள தான் கல்வி தேவை. மனித உறவுகளை மேம்படுத்தத் தான் கல்வி தேவை. ஒவ்வொரு படியிலும் ஒரு உலகத்தைப் பார்க்கிறோம். அடிப்படையில் உலகத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள மனித உறவு மேம்படுத்துகிற கல்வி முக்கியம், என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...