"N" வகை குடும்ப அட்டையினை 2017-ம் ஆண்டுக்கு புதுப்பித்துக்கொள்ள இணையதள முகவரி அறிமுகம்

கோவை மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் எப்பொருளும் வேண்டாதோருக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளை நிறமுடைய "N" குடும்ப அட்டைகளை 2017ம் ஆண்டுக்கு புதுப்பித்துக் கொள்வதற்கு ஏதுவாக www.tnpds.com என்னும் இணையதள முகவரியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

"N" குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் உள்ள விற்பனை முனையத்தில் தங்களது "N" குடும்ப அட்டையினை பதிவுசெய்துகொள்ளலாம். 

அல்லது, "N" குடும்ப அட்டைதாரர்கள் www.tnpds.com என்ற இணையதள முகவரியின் முகப்பில் "பயனுள்ள இணைப்புகள்" என்ற தலைப்பின் கீழ் காணப்படும் "N" கார்டு புதுப்பித்தல் தாள் என்ற இணைப்பில் "N"  குடும்ப அட்டையை பதிவு செய்த பின்னர் "N" குடும்ப அட்டை 1.1.2017 முதல் 31.12.2017 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது என்ற சீட்டு அச்சிட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தல் ஒப்புகை சீட்டினை "N" குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டி பராமரிக்கப்பட வேண்டும். இத்தகைய காலநீட்டிப்பு பதிவுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ள குடும்ப அட்டைகள் மட்டுமே நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளாக கருதப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...