முதல்வர் மீது அவதூறு கருத்து - சவுக்கு சங்கர் மீது கோவை காவல்நிலையத்தில் புகார்!

அரசு அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார்.


கோவை: தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கருத்துக்களைப் பரப்பி வரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் புகார் அளித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகரும், திரைப்பட இயக்குநருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.



அதில், தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் குறித்து சமீப காலமாகச் சவுக்கு சங்கர் என்பவர் அவதூறான கருத்துக்களையும், போலியான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து சமூக வலைத்தளத்தில் பேசி, பரப்பி வருவதாகவும், தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இம்மாதிரி தமிழக முதல்வர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சவுக்கு சங்கர் கூறி வருவதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளையே அவர் மிரட்டும் தோரணையில் பேசி வீடியோ வெளியிடுவதாகவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனிப்பட்ட நபர்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றைக் குறித்தும் அவர் தேவையற்ற விமர்சனங்களைச் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான அவதூறான விமர்சனங்களைச் செய்து வரும் சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...