நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பு பதவிகளுக்கு நேர்க்காணல்

நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர்களுக்கான நேர்காணலில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு, நேர்க்காணல் செய்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில செயலாளரும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அனைவரையும் வரவேற்றார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை தலைவரும் வனத்துறை அமைச்சருமான மதிவேந்தன், இணை செயலாளர்கள் வி.பி.ராஜன் திப்பம்பட்டி ஆறுசாமி, கொடநாடு பொன்தோஸ் ஆகியோர் விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.



அப்போது, இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்த உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதில் மாவட்ட திமுக துணை செயலாளர் ரவிகுமார், பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தஃபா, இளங்கோவன், உதகை நகர செயலாளர் ஜார்ஜ் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...