தாராபுரத்தில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.

தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆர்.டி.ஓ. குமரேசன் முகாமை தொடங்கிவைத்தார்.

இந்த முகாமில், கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை முதுநிலை கண் பரிசோதகர் டாக்டர் நிவேதா மற்றும் கண் மருத்துவ குழுவினர் முகாமில் கண் பரிசோதனை, ரத்த பரிசோதனை, கண் ரத்த அழுத்த பரிசோதனை, மாலைக்கண், கண்ணில் சதை வளர்ச்சி, கண்ணில் சீழ் வடிதல், கண் புரை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.

இந்தப் பரிசோதனையில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கி அவர்களை உயர் சிகிச்சைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. பிறகு, அவர்களுக்கு சாலை விதிகள் குறித்து அச்சிடப்பட்டுள்ள புத்தகம் மற்றும் துண்டு பிரசுரங்களை ஆர்.டி.ஓ. குமரேசன் வழங்கினார். சாலை விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த கண் சிகிச்சை முகாமில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக நேர்முக உதவியாளர் ராஜாராம் உள்ளிட்ட ஏராளமான ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...