கோவையில் கோவிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு - அதிரடியாக மீட்ட அதிகாரிகள்!

கோவை தேவராயபுரத்தில் வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.


கோவை: கோவை தேவராயபுரம் ஆக்கிரமிப்பிலிருந்த வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் பரமேஷ்வரன் பாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 24.7 ஏக்கர் நிலங்கள் தேவராயம்புரம் பகுதியில் உள்ளது. இந்த நிலங்களைக் கடந்த 25 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன், ராமசாமி, சீனிவாச ஐயங்கார், ஆனந்தகிருஷ்ணன் ஐயங்கார், உள்ளிட்ட 5 பேர் ஆக்கிரமிப்பு செய்து கத்திரிக்காய், தக்காளி உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகளைச் செய்து வந்தனர்.

இது குறித்து கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, கோவிலுக்குச் சொந்தமான சுமார் 25 கோடி மதிப்பிலான 24.7 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டனர்.



மேலும் அங்கு இது குறித்தான அறிவிப்புப் பலகை வைத்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...