வால்பாறையில் இருசக்கர வாகனம் பாறையில் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்றிரவு இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த மகேஷ் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: வால்பறை பச்சமலை எஸ்டேட்டை சேர்ந்தவர் மகேஷ் (வயது 23). இவர், சின்கோனா ஸ்டேட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 23), சின்கோனா எஸ்டேட்டை சேர்ந்த நந்தகுமார் (வயது 22) மற்றும் ரொட்டிகடையை சேர்ந்த அஸ்வின் (வயது 18) ஆகியோருடன் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில், வால்பாறையிலிருந்து சின்கோனா எஸ்டேட் பகுதிக்கு சென்றுள்ளனர்.

சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு செல்லும்போது, இருசக்கர வாகனத்தின் லைட் பழுதானதாகக் கூறப்படுகிறது. இதனால், சாலை தெரியாமல் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் அங்கிருந்த பாறைமேல் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில், மகேஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மூன்று பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

காயமடைந்த மகேஷை, அவ்வழியாக வந்த வாகனத்தில் ஏற்றி, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மகேஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.



தகவலறிந்து வந்த காவல்துறையினர், இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற மணிகண்டன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...