கோவை தடாகம் சாலையில் மாதிரி ரவுண்டானா அமைப்பு

கோவை தடாகம் ரோடு, லாலிரோடு, சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்காகவும், மாநகர காவல் மற்றும் போக்குவரத்து பிரிவின் சோதனை முயற்சியாக மாதிரி ரவுண்டானா அமைத்து சோதனை ஓட்டம்.


கோவை: மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் வகையில் மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டது.

கோவை, தடாகம் ரோடு, லாலிரோடு, சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்காகவும், மாநகர காவல்,போக்குவரத்து பிரிவின் சோதனை முயற்சியாக, சாலை பாதுகாப்பு கோட்டப் பொறியாளர் மனுநீதி மற்றும் அந்த பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள், மாநில நெடுஞ்சாலைகள் பிரிவு உதவி கோட்டப் பொறியாளர் எஸ்.சோழவளத்தான் மற்றும் அந்த பிரிவைச் சேர்ந்த அலுவலர்களுடன் இணைந்து மாதிரி ரவுண்டானா அமைத்து சோதனை ஓட்டம் இன்று மாலை 4.00 மணிமுதல் நடைபெற்றது.

இதனால், கௌலிபிரவுன் சாலை வழியாக மருதமலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், உழவர் சந்தையை அடுத்த குரு கோவிந்தசிங் சாலையில் இடது புறமாகத் திரும்பி, மேற்கு பெரியசாமி ரோடு, தடாகம் ரோடு வழியாக, லாலிரோடு ஜங்ஷனை அடைந்து அங்குச் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப, பயணம் மேற்கொள்ளலாம்.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



இதனை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் நேரில் ஆய்வு செய்தார்.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...