கோவை பேரூர் பகுதியில் சேவல்சண்டை - 6 பேர் கைது

கோவை புறநகர் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமாகச் சேவல் சண்டை நடத்திய 6 பேர் கைது.


கோவை: பேரூர் சுடுகாடு அருகே பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 6 பேரை பேரூர் போலீசார் கைது செய்தனர்.

கோவை புறநகர்ப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமாகச் சேவல் சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், பேரூர் சுடுகாடு அருகே உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குச் சேவல் சண்டை நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (35), மணிகண்டன் (35), ராஜேந்திரன் (38), முருகன் (37), பழனிச்சாமி (53), கண்ணன் (46) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 2 சேவல் மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...