வால்பாறையில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக சட்டப்பேரவையின் மாண்பைச் சீர்குலைத்த ஆளுநரைக் கண்டித்து வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


கோவை: வால்பாறையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறை பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் அமீர் தலைமையில் தமிழக சட்டப்பேரவையின் மாண்பைச் சீர்குலைத்த தமிழக ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக ஆளுநரைக் கண்டித்துக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன, தமிழகத்தின் மாண்பைக் கருத்தில் கொண்டு, ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கம் தலைவர் கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டு கையில் கட்சி கொடியேந்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...