குருடம்பாளையம் ஊராட்சியில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாம்

கோவை அருகே குருடம்பாளையம் ஊராட்சியில் நடந்த அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாமில் தென்னை கன்றுகள், காய்கறி விதைகள் விநியோகம்.



கோவை: கோவை மாவட்டம் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் குருடம்பாளையம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.



இதில் வேளாண் வணிகம், வேளாண்மை துணை இயக்குநர் பெருமாள்சாமி ஆலோசனையின்படி குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒட்டுமொத்த கிராம வளர்ச்சி மற்றும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் பட்டா, சிறு, குறு விவசாயிகள் சான்று, பயிர்க் கடன் மற்றும் கிசான் அட்டை விண்ணப்பம் பெறுதல், வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் சார்பாகத் தென்னை கன்றுகள் வினியோகம், காய்கறி விதைகள் விநியோகம் செய்யப்பட்டதன.

இந்த முகாமில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் திட்ட விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் டி.ரவி தலைமை தாங்கி சான்றிதழ்களை விவசாயிகளுக்கு வழங்கினார். வேளாண்மை அலுவலர் அன்னபூரணி, பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

பெரியநாயக்கன்பாளையம் வேளாண்மை உதவி அலுவலர் மணி அனைவரையும் வரவேற்றார்.



முகாமில் உழவர் சந்தை உழவர் அட்டை வழங்குதல், 2 கோடி வரை கடன் ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவைகளும் நடைபெற்றது.

இந்த முகாமில் ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், ஊராட்சி கவுன்சிலர்கள், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வருவாய்த்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, விதை சான்று துறை, வேளாண்மை பொறியியல் துறை, கூட்டுறவுத் துறை, மின்சார துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...