மேட்டுப்பாளையத்தில் இந்தியா - ரஷ்ய கலாச்சார நிகழ்ச்சி -‘ரஞ்சிதமே’ பாடலுக்கு ரஷ்யர்கள் நடனம்!

மேட்டுப்பாளையம் அருகே தனியார் பள்ளியில் பள்ளியில் ரஷ்யா - இந்தியா நல்லுறவு கலாச்சார நடன நிகழ்ச்சியில் ரஷ்ய நடன குழுவினர், ரஞ்சிதமே பாடலுக்கு ஆடிய குத்தாட்டம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் இந்தியா - ரஷ்யா நல்லுறவுக்கான கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற்றது.



பள்ளி மாணவர்களுக்கு ரஷ்ய நாட்டின் கலாச்சாரம், நடனம் குறித்து அறிந்துகொள்ள நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ரஷ்யாவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று தங்களது நாட்டின் பல்வேறு கலாச்சார நாட்டிய நடனங்களை அரங்கேற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



மேலும் இந்த நிகழ்ச்சியில் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படத்தில் ஹிட் அடித்த குத்து பாடலான ரஞ்சிதமே பாடலுக்கு ரஷ்யா நாட்டு கலைஞர்கள் தமிழ் பெண்கள் அணியும் பாவாடை தாவணி அணிந்து, குத்தாட்டம் போட்டனர்.

ரஷ்ய குழுவினரின் இந்த நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் மாணவர்கள், கரகோஷங்களை எழுப்பி கலைஞர்களை உற்சாகப்படுத்தினர்.

இதுகுறித்து கலாச்சார குழுவின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் பேசுகையில், "இந்தியா மற்றும் ரஷ்ய நாட்டு கலாச்சாரங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக 20 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இம்மாத இறுதி வரை ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது" என்றார்.



முன்னதாக ரஷ்ய கலைஞர்களுக்கு பள்ளி நிர்வாக அறங்காவலர் மோகன்தாஸ், மணிமேகலை மோகன்தாஸ் ஆகியோர், பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...