திருப்பூர் உடுமலை அருகே கோவிலுக்கு தானமாக வழங்கிய கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்குதல்..!

உடுமலை அடுத்த சோமவார்பட்டியில் உள்ள ஆல் கொண்ட மால கோவிலுக்கு பக்தர்கள் தானமாக வழங்கிய கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்கிய நிலையில், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து கண்காணிப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள சோமவார்பட்டியில் உள்ள ஆல் கொண்ட மால கோவிலுக்கு பக்தர்கள் கன்றுகளை தானமாக வழங்குவது வழக்கம். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் கோவிலுக்கு வந்து கன்றுகளை தானமாக கொடுக்கத் தொடங்கினர்.

இவ்வாறு பெறப்படும் கன்றுகளுக்கு பராமரிப்பு கட்டணமாக ஆயிரம் ரூபாய் கோவில் நிர்வாகத்தினர் வசூலித்து வந்தனர். இந்த நிலையில் தானமாக வழங்கப்பட்ட கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நோய் தாக்குதலுக்கு உள்ளான கன்றுகளை தனிமைப்படுத்திய கோவில் நிர்வாகத்தினர், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கடந்த 2 நாட்களாக சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர், தானமாக பெறப்பட்ட கன்றுகளின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவலை வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும், திருவிழா ஏற்பாடுகளில் குளறுபடி, கூடுதல் நுழைவு கட்டணம் வசூல் மற்றும் கன்றுகள் பராமரிப்பில் குழப்பம் ஏற்படுத்திய கோவில் நிர்வாகத்தை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...