திருப்பூர் உடுமலை அருகே கோவிலுக்கு தானமாக வழங்கிய கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்குதல்..!

உடுமலை அடுத்த சோமவார்பட்டியில் உள்ள ஆல் கொண்ட மால கோவிலுக்கு பக்தர்கள் தானமாக வழங்கிய கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்கிய நிலையில், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து கண்காணிப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள சோமவார்பட்டியில் உள்ள ஆல் கொண்ட மால கோவிலுக்கு பக்தர்கள் கன்றுகளை தானமாக வழங்குவது வழக்கம். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் கோவிலுக்கு வந்து கன்றுகளை தானமாக கொடுக்கத் தொடங்கினர்.

இவ்வாறு பெறப்படும் கன்றுகளுக்கு பராமரிப்பு கட்டணமாக ஆயிரம் ரூபாய் கோவில் நிர்வாகத்தினர் வசூலித்து வந்தனர். இந்த நிலையில் தானமாக வழங்கப்பட்ட கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நோய் தாக்குதலுக்கு உள்ளான கன்றுகளை தனிமைப்படுத்திய கோவில் நிர்வாகத்தினர், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கடந்த 2 நாட்களாக சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர், தானமாக பெறப்பட்ட கன்றுகளின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவலை வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும், திருவிழா ஏற்பாடுகளில் குளறுபடி, கூடுதல் நுழைவு கட்டணம் வசூல் மற்றும் கன்றுகள் பராமரிப்பில் குழப்பம் ஏற்படுத்திய கோவில் நிர்வாகத்தை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...