உதகையில் எமரால்டு அணையிலிருந்து 1500 கிலோ ரேசன் அரிசி மீட்பு

உதகை அருகே எமரால்டு அணைக்குள் 1500 கிலோ ரேசன் அரிசியைச் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி மர்மநபர்கள் வீசிச் சென்றதால் பரபரப்பு.


நீலகிரி: உதகை அருகே எமரால்டு அணைக்குள் 1500கிலோ ரேசன் அரிசியைச் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி வீசிச் சென்ற மர்ம நபர்களை, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கேரள மற்றும் கர்நாடகா மாநிலங்களை ஒட்டி உள்ளது. இதனால் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியைக் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனைக் கண்காணிக்கும் பணியில் நீலகிரி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலையும் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகள் சந்திக்கக்கூடிய சுருக்கி பாலம் என்ற இடத்தில் ரேஷன் அரிசி சிறுசிறு மூட்டைகளாகக் கட்டப்பட்டு அணைக்குள் வீசப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் அணையின் நீரில் தலா 15 கிலோ ரேஷன் அரிசி வீதம் 100 பைகளில் வீசப்பட்டிருந்த அரிசியினை மீட்டனர்.



மேலும் இந்த ரேஷன் அரிசி பைகளை அணைக்குள் வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...