கோவை அருகே தனியார் பேருந்துகள் மோதி விபத்து - பெண் பலி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சென்றான்பாளையம் பிரிவில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு முந்தமுயன்றபோது ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் படுகாயம் அடைந்தார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மனைவி அங்காத்தாள். இந்தத் தம்பதிக்கு முனியப்பன் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உள்ளார்.

இந்த நிலையில், தனது மகன் முனியப்பனுடன், அங்கத்தாள் பொள்ளாச்சி - கோவை சாலை உள்ள சென்றான்பாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி போட்டி போட்டுக்கொண்டு வந்த தனியார் பேருந்துகள் அங்கத்தாள் மற்றும் அவரது மகன் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே அங்காத்தாள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் முனியப்பனை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், அங்காத்தாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களான சந்தோஷ் குமார், செந்தில்குமார் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...