காவல் நிலையத்தில் துன்புறுத்தல் - கோவை சட்டக்கல்லூரி மாணவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு

கோவையில் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம் அவருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி, ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவருக்கு வழங்கினார்.


கோவை: கோவை திருமலையம்பாளையம் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். சட்டக் கல்லூரி மாணவரான இவர், கடந்த 2019 ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி, தனது வீட்டின் அருகே திடக்கழிவு மேலாண்மை மையம் அமையவிருப்பது குறித்து திருமலையாம்பாளையம் பேரூராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இத்திட்டம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் ரமேஷ்குமார் தகவல்களை பெற்றுள்ளார். இதன் காரணமாக, அப்போதைய மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி, வடவள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் சரக ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கே ஜி சாவடி உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் ரமேஷ்குமாரை காவல்நிலையம் அழைத்துச் சென்று துன்புறுத்தியதோடு, எச்சரித்தும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சட்டக்கல்லூரி மாணவர் ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதேபோல், மாநில மனித உரிமை ஆணையத்திலும் இது குறித்து அவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர் ரமேஷ்குமாருக்கு, தமிழக அரசு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அந்த இழப்பீட்டுத் தொகையை, உதவி ஆய்வாளரிடம் ரூ.50,000, ஆய்வாளர்கள் இருவரிடம் தலா ரூ.25,000 என வசூலித்து அளிக்கவும் உத்தரவிட்டது. இதை அடுத்து காவல்துறை துன்புறுத்தலுக்கு ஆளான சட்டக்கல்லூரி மாணவர் ரமேஷ்குமாருக்கு, ரூ.1 லட்சத்திற்கான காசோலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெயரில் வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...