திருப்பூர் பல்லடத்தில் சாலை பாதுகாப்பு வார விழா - இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் சௌமியா கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.



திருப்பூர்: பல்லடத்தில் 34வது சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்கம், பல்லடம் போக்குவரத்து காவல் துறையினர், பல்லடம் காவல் துறையினர் மற்றும் பல்லடம் தாலுக்கா வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் இணைந்து இதை நடத்தினர்.



சாலை பாதுகாப்பு வார விழாவின் ஒரு பகுதியாக, தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



பல்லடம் நால்ரோட்டில் துவங்கிய இந்த பேரணியை பல்லடம் டி.எஸ்.பி செளமியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செட்டிபாளையம் பிரிவு வரை சென்ற இந்த இரு சக்கர வாகனப் பேரணியானது, என்ஜிஆர் சாலை வழியாக மீண்டும் நால் ரோட்டில் நிறைவுபெற்றது.



கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மெட் போட்டு இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கும், சீட் பெல்ட் அணிந்து காரில் வந்தவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...