கோவை அருகே வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம்

கோவை மாவட்டம், சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட்டம்.


கோவை: கோவை மாவட்டம், சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமங்களில் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து இயற்கைக்கு வணக்கம் செலுத்தினர்.



கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் நேர்டு தொண்டு அமைப்புடன் இணைந்து அப்பகுதி மக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.



வெள்ளப்பதி கிராமத்தில் உள்ள பொதுஇடத்தில் வண்ண கோலமிட்டு புகையில்லா அடுப்புடன் பொங்கல் பொங்கிக் கொண்டாடினர். கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு கட்டுப்பாடுகளின்றி ஊர் பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இணைந்து மாட்டுப் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மக்கள் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என இயற்கை அன்னையிடம் வேண்டிக் கொண்டனர். அப்பகுதி மக்களுக்குப் பேராசிரியர் கனகராஜ், மருதாச்சல அடிகளார் பொங்கல் பரிசுகளை வழங்கினர்.



இதேபோல் சீங்கப்பதி கிராமத்திலும் பொங்கல் களைகட்டியது. பாரம்பரிய ஆடல், பாடலுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அரங்கேறின. ஊர் நடுவே அமைக்கப்பட்ட கரும்பு பந்தலில் பொங்கல் பொங்கி, அறுவடை நன்றாக அமைந்த இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவித்து, மகிழ்ச்சி பொங்கப் பொங்கல் பண்டிகையினை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...