ஊட்டி தாவரவியல் பூங்காவில் சமத்துவ பொங்கல் விழா - சுற்றுலா பயணிகள் உற்சாக கொண்டாட்டம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனத்தில் சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.


நீலகிரி: தமிழர் திருநாளாம் தை திருநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்றும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள் இன்று சுற்றுலா தலங்களை காண நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.



இதன் காரணமாக உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக சுற்றுலாத்துறை சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இந்த விழாவை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

பூங்காவின் மைய பகுதியில் பொங்கல் வைத்து பொங்கல் பொங்கிய போது சுற்றி இருந்த அனைவரும் “பொங்கலோ பொங்கல்”என மகிழ்ச்சியுடன் கோஷமிட்டு உற்சாகமடைந்தனர்.



இதனையடுத்து பூங்காவில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் பரத நாட்டியம் மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மலைவாழ் மக்களான தோடர் மற்றும் படுகர் இன பெண்கள் ஆடிய பாரம்பரிய நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



அதில் படுகர் இன மக்கள் நடனமாடும் பொழுது சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு அவர்களது பாரம்பரிய பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். இதில் உற்சாகமாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...