கோவையில் லாரி மீது பைக் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு

கோவை நவக்கரை அருகே பால் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: கோவை சிட்கோ பகுதியை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (வயது21). சிஎன்சி ஆப்ரேட்டராக வேலை செய்து வந்த இவர், தமது நண்பர் மதுக்கரை அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் நித்திஷுடன் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இரு சக்கர வாகனத்தில் பாலக்காடு சென்றனர்.

பின்னர், மீண்டும் இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தனர். சூரிய பிரகாஷ் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். கோவை மாவட்டம் நவக்கரை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அந்த இருசக்கர வாகனம் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த பால் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில், சூரியபிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் நித்திஷ், படுகாயங்களுடன் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக க.க சாவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...