கோவையில் சாலை பாதுகாப்பு வார மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர்

சாலை பாதுகாப்பு வாரத்தின் 5வது நாளையொட்டி கோவை மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்து கலந்து கொண்டார்.



கோவை: விபத்துக்களை தவிர்க்கும் விதமாக சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜனவரி 11 முதல் 17 ஆம் தேதி சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



அதன்படி சாலை பாதுகாப்பு வாரத்தின் 5ஆம் நாளான இன்று, கோவை மாநகர காவல் துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.



இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.



கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்து அவரும் பொதுமக்களுடன் இணைந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.



இந்த மாரத்தான் அவிநாசி ரோடு வழியாக வ.உ.சி மைதானம் வரை 5 கிலோமீட்டருக்கு நடைபெற்றது.



இதில் போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன், துணை ஆணையாளர் சிலம்பரசன், உதவி ஆணையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதே போல் உக்கடம் காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று கோவை மாநகர காவல் நிலையங்கள் அனைத்திலும் மாரத்தான் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...