கேரளாவில் ஒருவரை தாக்கி கொலை செய்த புலி - மயக்க ஊசி செலுத்தி பிடித்த வயநாடு வனத்துறை..!

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஒருவரை தாக்கி கொலை செய்துவிட்டு போக்கு காட்டி வந்த புலியை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்த நிலையில் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளார்.


கேரளா: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியில் நேற்று முன்தினம் புலி ஒன்று தாக்கி கொலை செய்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்தப் புலியை உடனடியாக பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து வனத்துறையினர் ஆட்கொல்லி புலியை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டுகளை அமைத்திருந்தனர். ஆனால் கூண்டில் புலி சிக்காத நிலையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் வயநாடு வனத்துறையினர் புலியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் குப்பாடிரா பகுதியில் பதுங்கி இருந்த புலிக்கு வனத்துறையினர் மயக்க ஊசியை செலுத்தினர்.



அதனையடுத்து அந்த புலி மயங்கிய நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் அங்கும் இங்குமாக சுற்றியது.



நீண்ட நேரத்திற்கு பின் மயங்கி கீழே படுத்ததை அடுத்து அந்த புலி பிடிக்கபட்டு வயநாட்டில் உள்ள வன விலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்த பிடித்த நிலையில் மாணந்தவாடி பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....