ஊட்டி அருகே சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் - ஆட்சியர் அம்ரித் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள அணிக்கொரை கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதல்வர் கையொப்பமிட்ட வாழ்த்து மடலை வழங்கினார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தூனேரி ஊராட்சிக்கு உட்பட்ட அணிக்கொரை கிராம சமுதாயக் கூடத்தில், சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 1 முழு கரும்பு மற்றும் ரொக்கத்தொகை தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அம்ரித், அணிக்கொரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், பழங்குடியினர் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து, அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.



மேலும், 5 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு முதல்வர் கையொப்பமிட்ட வாழ்த்து மடல்களை வழங்கினார்.



இதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ‘வாழ்க வளமுடன்' மகளிர் சுய உதவிக்குழுவிற்குத் தொழில் தொடங்குவதற்காக ரூ.15 லட்சத்திற்கான காசோலையினையும், சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்குப் புத்தாடைகளை வழங்கி, சமத்துவ பொங்கல் மற்றும் சுகாதார பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறப்பாகப் போடப்பட்டிருந்த ரங்கோலி கோலத்தினை பார்வையிட்டு சுய உதவிக்குழு உறுப்பினர்களைப் பாராட்டினார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...