பாஜக-வை கண்டித்து நடைபயணம் - நடிகை காயத்ரி ரகுராம் அறிவிப்பு

பாஜகவை கண்டித்து வரும் 27ஆம் தேதி முதல் சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் அறிவிப்பு.


கட்சி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத பாஜகவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நடைபயணமாக செல்ல உள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில், அண்ணாமலை திட்டமிட்டு தன்னை பற்றிய அவதூறு கருத்துகளை உருவாக்குவதாக சமீபத்தில் காயத்ரி ரகுராம் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து பாஜக உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசியிருந்தார். மேலும் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்தும், பாஜக குறித்தும் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத பாஜக கட்சியை கண்டித்து சென்னை முதல் கன்னியாக்குமரி வரை நடைபயணமாக செல்ல உள்ளதாக காயத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரித்தள்ளார்.



இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'பா.ஜ.க பெண்களை அவமானப் படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்த பயணத்தில் யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம்.



எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது' என்று பதிவிட்டுள்ளார்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...