கேரளாவுக்கு போதைப் பொருள் கடத்திய கும்பல் கைது - போலீசாரை நேரில் அழைத்து பாராட்டிய கோவை சரக டிஐஜி!

நீலகிரி வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பிடிக்க உதவிய தலைமை காவலர் மகேஷை கோவை சரக டிஐஜி விஜயகுமார், நேரில் அழைத்து பாராட்டினார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய தலைமை காவலர் மகேஷ். இவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூர் வழியாக தமிழக பதிவெண் கொண்ட லாரியில், பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு இடையே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக காவலர் மகேஷ்-க்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவர், கூடலூர் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார், தொரப்பள்ளி சோதனை சாவடியில் குறிப்பிட்ட லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.



இந்த சோதனையில் அந்த லாரியில் கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 40 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பிடிக்க உதவிய காவலர் மகேஷை கோவை சரக டிஐஜி விஜயகுமார், நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...