பல்லடம் அருகே பணம் கையாடல் செய்த தனியார் நிறுவன மேலாளர் கைது

பல்லடம் அருகே பணிபுரியும் இடத்தில் ரூ.9 லட்சம் பணத்தை கையாடல் செய்த தனியார் நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமளாபுரம் கருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வி.



இவர் சுவாதி லட்சுமி என்ற பெயரில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார்.

இவரது நிறுவனத்தில் பள்ளபாளையத்தைச் சேர்ந்த ஆண்டனி பெர்னார்ட் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். டிரான்ஸ்போர்டில் சரக்குகளை ஏற்றுவது, வாடகை வசூலிப்பது மற்றும் டெக்ஸ்டைல்ஸில் தயாரான துணிகளை விற்பனை செய்வது என நிர்வாகம் முழுவதையும் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நிறுவனத்திற்கு வரும் பணத்தில் ரூ.9 லட்சத்தைக் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது.



இதனையடுத்து தாமரைச்செல்வி அளித்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆண்டனி பெர்னார்ட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...