மாமன்ற உறுப்பினர்களுக்கு நற்சான்றிதழ் - பட்டியல் அளிக்க கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சியில்‌ சிறப்பாகச் செயல்படும்‌ மாமன்ற உறுப்பினர்களின் பட்டியல்‌ தயாரித்து அளிக்கும்படி மண்டல உதவி ஆணையர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்‌ உத்தரவு.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ சிறப்பாகச் செயலாற்றிவரும்‌ மாமன்ற உறுப்பினர்களுக்குப் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்‌ வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியலைத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு மண்டல உதவி ஆணையர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ உத்தரவிட்டுள்ளார்‌.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாநகராட்சியில்‌ சிறப்பாகச் செயலாற்றிவரும்‌ மாமன்ற உறுப்பினர்களைப் பாராட்டி குடியரசு தினவிழாவில்‌, நற்சான்றிதழ்‌ வழங்கப்பட உள்ளது. அதன்படி ஒரு மண்டலத்திற்கு ஒரு மாமன்ற உறுப்பினர்‌ வீதம்‌ 5 மண்டலத்திற்கு 5 மாமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து அவர்களின்‌ பெயர்‌ பட்டியலை எதிர்வரும்‌ 19ஆம்‌ தேதிக்குள்‌ ஆணையர்‌ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்‌.

மாமன்ற கூட்டத்திற்கு வருகை தந்ததற்கு 10 மதிப்பெண்‌, மாமன்ற கூட்டத்தில்‌ ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியதற்கு 5 மதிப்பெண்‌, நமக்கு நாமே திட்டத்துக்கான பங்களிப்பு 10 மதிப்பெண்‌, திடக்கழிவு மேலாண்மைத்‌ திட்டம்‌ செயலாக்கத்தில்‌ பங்களிப்புக்கு 10 மதிப்பெண்‌, பொது ஒதுக்கீட்டு இடம்‌ மீட்பு மற்றும்‌ பராமரிப்பு பணியில்‌ பங்களிப்புக்கு 5 மதிப்பெண்‌, வரிவசூலிப்புப்‌ பணிகளில்‌ பங்களிப்புக்கு 5 மதிப்பெண்‌, பொதுமக்களிடையே நன்மதிப்புக்கு 5 மதிப்பெண்‌ என மொத்தம்‌ 50 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு வழங்கப்படும்‌.

மாமன்றத்திற்கு வருகை, ஆக்கப்பூவமான ஆலோசனை ஆகியவற்றுக்கான மதிப்பெண்கள்‌ மாமன்ற செயலாளர்‌ மூலம்‌ அனைத்து வார்டுகள்‌ குழு உதவி ஆணையர்களுக்கும்‌ தனியாக அனுப்பி வைக்கப்படும்‌.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...