பொங்கல்: கோவை - திண்டுக்கல் சிறப்பு இரயில் இயக்கம் - தென்மாவட்டங்களுக்கு கூடுதல் சேவை துவங்க வலுக்கும் கோரிக்கை

கோவையிலிருந்து பழனி வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டுவந்த 5 ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி, கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஜனவரி 13ம் தேதி முதல் ஜனவரி18ம் தேதிவரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



அதேநேரத்தில், கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பழனி வழியாக இயக்கப்பட்டுவந்த 5 ரயில்களின் சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென ரயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி கோவையிலிருந்து தென்காசி, மதுரை, திண்டுக்கல், ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டுவந்த ரயில்களின் சேவையை மீண்டும் தொடர வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி,

1. கோவையிலிருந்து தென்காசி, திருநெல்வேலிக்கு வராந்திர ரயில்சேவை 2022ல் தொடங்கப்பட்டது. இந்த சேவை 95% பயணிகளுடன் மிகவும் பயனுள்ளதாகவும், நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்த ரயிலை வாரத்திற்கு 3 நாட்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. கோவையிலிருந்து மதுரைக்கு தினசரி ரயில் சேவை கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தச் சேவையை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் போல், முன்பதிவு மற்றும் ஏசி சேர்கார் வசதிகளுடன் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

3. கோவையிலிருந்து திண்டுக்கல் வரை இயக்கப்பட்டுவந்த ரயிலானது, சென்னை வழியாக கோவை - திருவனந்தபுரம், மங்களூரு, சென்னை வழியாக மதுரை-கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, தென்காசி, திருச்செந்தூர் என தென்னக ரயில்வேயின் இரண்டு முக்கிய வழித்தடங்களை இணைத்தது. இந்த ரயில் சேவையை பயணிகள் நலன்கருதி தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும், இரவு நேரங்களில் கோவையிலிருந்து பழனி வழியாக தூத்துக்குடி, ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில்களை இந்தாண்டு முதல் மீண்டும் இயக்க வேண்டும் எனவும் ரயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...