கடும் குளிரில் உறைந்த கோவை - மக்கள் அவதி!

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் நிலவிய கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த புத்தாண்டு முதல் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நள்ளிரவு தொடங்கி காலை வரை அதிகப்படியாக குளிர் நிலவி வருகிறது.



அந்த வகையில், இன்றும் கோவை மாநகர் மற்றும் சுற்றுப் பகுதிகள் உட்பட மாவட்டத்தில் பல இடங்களிலும் கடுமையான குளிர் நிலவியது.

மழைபோல் கொட்டிய பனியால், வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மாவட்டத்தின் பல இடங்களிலும் குறைவான வெப்பநிலையே பதிவாகியுள்ளது.



அதன்படி, ஆனைமலையில் 14.9 டிகிரி செல்சியசும், அன்னூரில் 14.4 டிகிரி செல்சியசும், காரமடையில் 13.6 டிகிரி செல்சியசும், மதுக்கரையில் 19.6 டிகிரி செல்சியசும், சுல்தான்பேட்டையில் 16.6 டிகிரி செல்சியசும், சூலூரில் 14.5 டிகிரி செல்சியசும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பகுதியில் 16.6 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது.

தைப்பொங்கல் வரை இந்த பனிப்பொழிவு நிலவும் எனவும், கோவையில் குளிரின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...