கடும் குளிரில் உறைந்த கோவை - மக்கள் அவதி!

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் நிலவிய கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த புத்தாண்டு முதல் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நள்ளிரவு தொடங்கி காலை வரை அதிகப்படியாக குளிர் நிலவி வருகிறது.



அந்த வகையில், இன்றும் கோவை மாநகர் மற்றும் சுற்றுப் பகுதிகள் உட்பட மாவட்டத்தில் பல இடங்களிலும் கடுமையான குளிர் நிலவியது.

மழைபோல் கொட்டிய பனியால், வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மாவட்டத்தின் பல இடங்களிலும் குறைவான வெப்பநிலையே பதிவாகியுள்ளது.



அதன்படி, ஆனைமலையில் 14.9 டிகிரி செல்சியசும், அன்னூரில் 14.4 டிகிரி செல்சியசும், காரமடையில் 13.6 டிகிரி செல்சியசும், மதுக்கரையில் 19.6 டிகிரி செல்சியசும், சுல்தான்பேட்டையில் 16.6 டிகிரி செல்சியசும், சூலூரில் 14.5 டிகிரி செல்சியசும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பகுதியில் 16.6 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது.

தைப்பொங்கல் வரை இந்த பனிப்பொழிவு நிலவும் எனவும், கோவையில் குளிரின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...