மாலை 3 மணிக்கு விழிப்புணர்வு அவசர கூட்டம் - கோவை மருந்து வணிகர்களுக்கு அழைப்பு

கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை, சுகாதாரத்துறை இணைந்து இன்று (10.01.2023) மாலை 3 மணியளவில் சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு அவசர கூட்டத்தில் அனைத்து மருந்து வணிகர்கள் பங்கேற்க அழைப்பு.


கோவை: கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை, சுகாதாரத்துறை, மருந்து வணிகர் சங்கம் இணைந்து நடத்தும் அவசர கூட்டத்தில் அனைத்து மருந்து வணிகர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் மருந்து இருப்பு பராமரித்தல், வலி நிவாரணி மாத்திரைகள், கருத்தடை மாத்திரைகள், இவ்வகையான மருந்துகள் விற்பனை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்பட உள்ளன.

இதற்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று (10.01.2023) மாலை 3 மணியளவில், சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது, கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில், மருந்து கட்டுப்பாட்டு துறை துணை இயக்குனர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மற்றும் அனைத்து மருந்து ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து வணிகர்களும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...