விவசாயத் தோட்டத்தில் உலா வரும் ஒற்றைக் காட்டுயானை - கோவையில் விவசாயிகள் கலக்கம்!

கோவை வாளையாறு எல்லையில் உலா வரும் ஒற்றைக் காட்டுயானை, மாவூத்தம்பதி கிராமத்தில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வாளையாறு எல்லையில் உள்ள மாவூத்தம்பதி ஊராட்சி முருகன்பதி கிராமத்தில், தர்மராஜ் என்ற விவசாயி தமது தோட்டத்தில் தென்னை, வாழை, சோலம் ஆகியவற்றை பயிரிட்டுள்ளார்.



இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அருகே உள்ள மலையை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து இறங்கும் ஒற்றை காட்டு யானை, தர்மராஜின் தோட்டத்தில் புகுந்து, அரை ஏக்கரில் பயிரிட்டிருந்த சோளப்பயிர்களை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, அங்குள்ள சுமார் 3 வயதுடைய தென்னங்கன்றுகளை சேதப்படுத்தி குறுத்துகளையும் பிடிங்கியுள்ளது.

பேட்டரி மின்வேலிகள் அமைத்திருந்தாலும், இந்த ஒற்றை யானையானது, அருகே உள்ள மரங்களை தூக்கி வேலிகள் மீது வீசி உடைத்துவிட்டு உள்ளே செல்கிறது. வனப்பகுதிக்குள் விரட்ட முயல்பவர்களையும் , யானை தாக்க முயல்வதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



மேலும், காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதத்தால் ஏற்படும் நஷ்டத்தையும் தாண்டி, அதனை சீர்செய்யவும் கூடுதல் செலவு ஆவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் நுழைவதைத் தடுக்க வனத்துறை நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...