திருப்பூர் பல்லடம் அருகே வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு..!

பல்லடம் அடுத்த காளிவேலம்பட்டி பகுதியை சேர்ந்த மயில்சாமி தனது காரை இயக்க முயன்றபோது திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் உடனடியாக கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் காளி வேலம்பட்டி பிரிவில் வசித்து வருபவர் மயில்சாமி. இவர் தனது ஜென் காரை வீட்டின் முன்பு நிறுத்துவது வழக்கம்.

அதேபோல், நேற்றிரவு வெளியில் சென்று திரும்பிய அவர் வீட்டின் முன்பு தனது காரை நிறுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று காலை வெளியில் செல்வதற்கு காரை இயக்கியுள்ளார்.

இதனிடையே பலமுறை இயக்கியும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. அப்போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக கீழே இறங்கிய மயில்சாமி காரின் முன் பகுதிக்கு செல்வதற்குள் தீ மளமளவென கார் முழுவதும் பரவியது.



இதனை தொடர்ந்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.

இதற்குள் கார் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. மயில்சாமி வாகனத்தை இயக்க முற்பட்டபோது எலக்ட்ரிகல் கோளாறு காரணமாக இன்ஜினில் புகை வந்து திடீரென தீப்பற்றி இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயில்சாமி உடனடியாக கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...