ஊட்டி பவானீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா விழா - களைக்கட்டிய தோடர்களின் பாரம்பரிய நடனம்

ஊட்டி அருகே உள்ள பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனத்தை ஒட்டி நடைபெற்ற தேர் ஊர்வலத்தில் தோடர் பழங்குடியின ஆண்கள் ஒன்று கூடி ஆடிய பாரம்பரிய நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.



நீலகிரி: ஊட்டியிலிருந்து முத்தொரை பாலாடா செல்லும் சாலையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டிற்கான 111-ஆம் ஆண்டு ஆரூத்ரா விழா நேற்று தொடங்கியது.



அதனை தொடர்ந்து இன்று அதிகாலை தேரின் வடத்தை பிடித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடக்கி வைத்தார். தேரை நீலகிரி மாவட்டத்தின் பூர்வ குடிகளான தோடர் பழங்குடியின ஆண்கள் கோவிலில் இருந்து உதகை மத்திய பேருந்து நிலையம், மெயின் பஜார் வழியாக ஊட்டி மாரியம்மன் கோவிலுக்கு இழுத்து வந்தனர்.

அங்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன. அதனை தொடர்ந்து தோடர் இன பழங்குடியின ஆண்கள் மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் வட்டமாக நின்று ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்தியவாறு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினர்.



நூற்றுக்கும் மேற்பட்ட தோடர் இன ஆண்கள் பாரம்பரிய உடையுடன் நடனமாடியது சிறப்பாக இருந்தது. அதன் பின்னர் மீண்டும் பவானீஷ்வரர் தேர் காப்பி ஹவுஸ் சந்திப்பு வரை சென்று மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்லபடுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...