கோவை கிணத்துக்கடவு அருகே குடும்ப பிரச்சினையில் பெண் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை - பரபரப்பு..!

கிணத்துக்கடவு ஆதித்யா அவென்யூ பகுதியில் கணவர் சரியாக கவனித்துக் கொள்ளாமல், செலவுக்கு பணம் தராமல் இருந்ததால் மனமுடைந்த பெண் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள ஆதித்யா அவென்யூ விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தவர் ராதா. இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு உதகையை சேர்ந்த குணா என்பவருடன் திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதனிடையே அவர் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில் பாளையம் பகுதியில் டைலர் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் துணி கடைக்கு வேலைக்கு சென்ற போது அங்கு சுப்பையா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ராதாவும் சுப்பையாவும் கிணத்துக்கடவு ஆதித்யா அவென்யூ பகுதியில் உள்ள தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக சுப்பையா, ராதாவை சரியாக கவனிக்காமல், செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக மனமுடைந்த ராதா நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராதாவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...