கோவையில் சுமைதூக்கும் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை டி.கே. காய்கறி மார்க்கெட் அருகே பீடி கேட்டதற்கு தர மறுத்த சுமை தூக்கும் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (52). இவர் கோவை பி.பி வீதியில் தங்கி, டவுன்ஹால் பகுதியில் உள்ள டி.கே. காய்கறி சந்தையில் சுமை தூக்கும் பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மணிகண்டன் கடந்த 3ஆம் தேதி தண்டு மாரியம்மன் கோயில் அருகே படுத்திருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மணிகண்டனிடம் பீடி கேட்டதாக தெரிகிறது.

அதற்கு மணிகண்டன் மறுத்த நிலையில், அந்த நபர் அங்கிருந்த இரும்பு கம்பியால் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில், பெரிய கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...