கோவை வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 200 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது

கோவை வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 200 கிலோ கஞ்சாவை கேரளா கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை: ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா, கோவை வழியாக கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனை தடுக்க கேரள எல்லையான வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட பகுதிகளில் கேரளா கலால் துறை அதிகாரிகள் தொடர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் கலால் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் வாளையார் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட மீன் லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மீன் பெட்டிகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது.



மூட்டைகளில் இருந்து 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கலால் துறை அதிகாரிகள், கஞ்சாவை கடத்தி வந்த மயிலாடுதுறையை சேர்ந்த மாரிமுத்து (27), செல்வம் (38) என இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...