போதையில்லா மாவட்டமாக மாற்றப்படும்..! - நீலகிரி புதிய எஸ்பி பிரபாகர் உறுதி

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரபாகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.



நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆசிஸ் ராவத், சமீபத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றபட்டார். அவருக்கு பதிலாக சென்னை மெட்ரோ தலைமை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரபாகர் நியமிக்கபட்டார்.



இதையடுத்து இன்று ஊட்டி வந்த பிரபாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் இருந்து மாவோயிஸ்ட் அமைப்பினர், நீலகிரி மாவட்டத்திற்குள் வராமல் தடுக்கப்படும் என்றும், ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், போதையில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.



இவர் 2005 -ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி- ஆக ஆக பணியில் சேர்ந்தார் பிரபாகர். பின்னர் வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தமிழக அதிரடி படையில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அவர், இறுதியாக சென்னை மெட்ரோ தலைமைபாதுகாப்பு அதிகாரியாக இருந்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...