கோவை கிணத்துக்கடவு அருகே சொந்த தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன் கைது..!

கிணத்துக்கடவு அடுத்த வடபுதூர் பகுதியில், தேங்காய் வியாபாரம் செய்து வந்த சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடபுதூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரம்மாள். இவரது மகன்களானமகாலிங்கம் மற்றும் ஆறுச்சாமி ஆகிய இருவரும் அதே பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில், தேங்காய் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்றிரவு வடபுதூர் பேருந்து நிறுத்தம் அருகே சகோதரர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, தம்பி ஆறுச்சாமி, அண்ணன் மகாலிங்கத்தை அடித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அண்ணன் மகாலிங்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆறுச்சாமியின் வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஆறுச்சாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், ஆறுச்சாமியின்உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்தஅண்ணன் மகாலிங்கத்தை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அண்ணனே சொந்த தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...