கோவை பன்னிமடை அருகே தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் - விவசாயிகள் அச்சம்

கோவை பன்னிமடையை அடுத்த தாளியூர் புறா தோட்டம் ராஜகோபால் என்பவரது தோட்டத்தில் நேற்று இரவு இரண்டு காட்டு யானைகள் புகுந்தது. தோட்டத்தில் இருந்த அவரது வீட்டில் இருந்து யானைகள் உலா வருவதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான ஆனைகட்டி மற்றும் மாங்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவததை யானைகள் வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை அங்குள்ள தோட்டங்களில் தினமும் இரவில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.



நேற்று இரவு, பன்னிமடையை அடுத்த தாளியூர் புறா தோட்டம் ராஜகோபால் என்பவரது தோட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் புகுந்துள்ளது. தோட்டத்தில் காட்டு யானைகள் உலா வருவதை அவர்கள் வீடியோ எடுத்த நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...