அரசியல் ஆலோசனை நிறுவனத்தை தொடங்கிய சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்

ஐ.பி.டி.எஸ் என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்தை தொடங்கியுள்ள லயோலா கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கோவை பிரஸ் கிளப்பில் அந்த நிறுவனத்தின் இணையதளத்தை அறிமுகம் செய்தனர்.



கோவை: சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில், ஐ.பி.டி.எஸ்., என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.



இந்த நிறுவனத்தின் இணையதள அறிமுக நிகழ்ச்சி, இன்றைய தினம் கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.



இதில் ஐ.பி.டி.எஸ். நிறுவனர் திருநாவுக்கரசு கூறியதாவது, லயோலா கல்லூரியில் 2002ம் ஆண்டு பண்பாட்டு மக்கள் தொடர்பு மையம் துவக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதுவரை 31 கணிப்புகளை வெளியிட்டுள்ளோம்.

2004 லோக்சபா தேர்தல் முதல், கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என கணித்தோம். தற்போது நாங்கள், இண்டியன் பொலிடிகல் டெமாக்ரடிக் ஸ்ட்ராடஜி (ஐ.பி.டி.எஸ்.,) என்ற அரசியல் ஆலோசனை அமைப்பைத் துவக்கியுள்ளோம்.



இதன் இணையதளத்தை http://ipds.com.in/ கோவையில் அறிமுகம் செய்கிறோம். இந்த இணையதளத்தில் எங்களது முந்தைய செயல்பாடுகள், அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் வழங்கும் சேவைகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் தொடர்பான ஆலோசனை, உத்திகளை வகுத்துக் கொடுக்க உள்ளோம். இதுவரை மாநில மற்றும் தேசிய அளவில் 3 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில், அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...