வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 263 பிறந்தநாளையொட்டி, கோவை ஈச்சனாரியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263 பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி ஈச்சனாரி பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்நிகழ்வில் சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன.

இந்த நிகழ்வில் அதிமுக கிணத்துக்கடவு பகுதி கழக செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...