கோவையில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார்


கோவை மாவட்டத்தில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டு தரக்கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் அ.தி.மு.க வினர் புகார் மனு அளித்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அ.தி.மு.க கட்சியில் மாநகராட்சி 52-வது பகுதி துணை செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டுத் தரக்கோரி, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற உறுப்பினர்களில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியை தவிர்த்து மீதமுள்ள 8 சட்டமன்ற உறுப்பினர்களை கடந்த ஒரு வார காலமாக காணவில்லை எனவும், சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களது தொலைபேசி எண்கள் அனைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் சீனிவாசன் தெரிவித்தார்.

இதனால் நலத்திட்டப்பணிகள் முடங்கி இருப்பதாகவும், காணாமல் போன சட்டமன்ற உறுப்பினர்களை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் எளிதில் அணுகக்கூடிய முதலமைச்சராக இருப்பதாகவும், அ.தி.மு.க தொண்டர்களின் முழு ஆதரவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...