கோவையில் உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த ஐடி ஊழியர் கைது..!

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே தனியார் உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ஐ.டி ஊழியரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வேலப்பட்டி அடுத்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (37). இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ சண்முகா சாலையில் நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் முத்து குமாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி முத்துக்குமார் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளார். இதை கண்ட அங்கிருந்த இளைஞர்கள் சிலர் உதவியுடன் கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரை மடக்கி பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பிரமோத் (23) என்பதும், பி.பி.ஏ பட்டதாரியான இவர், ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஐடி ஊழியர் ஒருவர், உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...