கோவையில் ‘கிரைண்டர்’ செயலி மூலம் ஓரினச்சேர்க்கையாளரை குறிவைத்து நடந்த வழிப்பறி - கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது..!

ஓரினச்சேர்க்கையை விரும்புபவர்களுக்கான கிரைண்டர் (grindr) செயலி மூலம் கோவையை சேர்ந்த நபரிடம் பழகி நேரில் வரவழைத்து, பணம், நகை, செல்போனை பறித்து சென்ற கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது.


கோவை: கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் ஓரினச்சேர்க்கையை விரும்புபவர்களுக்கான “கிரைண்டர்” (Grindr) என்ற செயலியில் கணக்கை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் இந்த செயலி வாயிலாக ராக்கி என்ற பெயரில் ஒருவர் அவருக்கு அறிமுகமானதாக தெரிகிறது.

கோவையை சேர்ந்த அந்த வாலிபருக்கும் , செயலியில் அறிமுகமான ராக்கி என்ற வாலிபருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட அந்த 30 வயது வாலிபரை புத்தாண்டையொட்டி சந்திக்கலாம் என ராக்கி கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அவரை சரவணம்பட்டி அருகே ஆளில்லா கட்டிடத்திற்கு வரச் சொல்லி தனிமையில் இருட்டில் சந்திக்கலாம் என ராக்கி தெரிவித்துள்ளார். இதனை நம்பி வந்த அந்த அப்பாவி வாலிபரை இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்துள்ளனர்.

அப்போது அந்த நான்கு பேரும் அந்த வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலி, தங்க மோதிரம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, ராக்கி என்ற பெயரில் செயலில் பேசிய நபர் போலி என்பது தெரியவந்தது. ராக்கி என்ற பெயரில் அறிமுகமான ஓரினச்சேர்க்கை போர்வையில் பணம் பொருளை கொள்ளையடிக்க கொள்ளை கும்பல் செய்த திட்டமிட்ட சதி என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், விசாரணையில் பிடிபட்ட நபர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (27) ராக்கி என செயலில் அறிமுகமான நபர்.

மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாரிச் செல்வம் (23), மற்றும் தனியார் கல்லூரி விடுதியில் படித்து வரும் திருச்சியை சேர்ந்த அபிராம் (19), கொடைக்கானலை சேர்ந்த ஹரி விஷ்னு (21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து வழிப்பறி செய்த செல்போன், உள்ளிட்ட பொருட்கள் சரவணம்பட்டி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. ஓரினச்சேர்க்கைக்காக வந்த நபரை கத்தியை காட்டி பணம் பறித்த வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது போன்ற செயலியில் அறிமுகமாகும் நபர்கள் மீது ஆசை காட்டி மோசத்தை அரங்கேற்றுவது தொடர்கதையாகி வரும் நிலையில், இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...