கூடலூர் அருகே கோழி ஏற்றி வந்த வாகனத்தை மறித்து தாக்கிய காட்டு யானை - அச்சத்தில் அலறியடித்து ஓடிய வாகன ஓட்டுநர்..!

நீலகிரி கூடலூர் நகர பகுதியில் புகுந்த காட்டு யானை, கோழி ஏற்றி வந்த வாகனத்தை மறித்து தாக்க முயன்ற நிலையில், அச்சத்தில் ஓட்டுனரும் உதவியாளரும் அலறியடித்து ஓடிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் இருந்து வெளியில் வரும் காட்டு யானைகள் உணவு தேடிகிராம பகுதிகள் மற்றும் கூடலூர் நகர பகுதிக்கு வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.



இந்த நிலையில் புத்தாண்டு நாளான இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று திடீரென நகருக்குள் வந்துள்ளது. செம்பாலா பகுதிக்கு வந்த அந்த யானை திடீரென முக்கிய சாலையில் நடந்து வந்ததை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



அப்போது அவ்வழியே கோழிகளை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட காட்டு யானையை வாகனத்தை மறித்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால், அச்சமடைந்த வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர், வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். பின்பு வேகமாக வந்த யானை அந்த வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு தொடர்ந்து நடந்து சென்றது.

யானை வாகனத்தை தாக்கும் காட்சிகள் அங்கிருந்து ஒரு வணிக நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்பொழுது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...