அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளுடன் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 'யுகம் 2017' துவக்கம்


குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 'யுகம் 2017' என்னும் நிகழ்ச்சி நேற்று தொடங்கி இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 10, 11) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது



யுகம் 2017-இல் கலை மற்றும் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள், பயிலரங்கம் மற்றும் பலவற்றுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியானது மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு மேடையாக அமையும். இந்நிகழ்ச்சியில் இந்த வருடம் 12,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.



அறிவு சார்ந்த மற்றும் பயிலரங்கம் பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. இதில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றார்கள். இந்த வருடத்துக்கான கருப்பொருள் "பெண்களின் முன்னேற்றம்" என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர். 



மேலும், இந்நிகழ்ச்சியில் டாக்டர் என்.மகாலிங்கம் தென் இந்திய கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி இவ்வாண்டு சேர்க்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெண்களின் முன்னேற்றத்தைப் குறித்து மீரா எர்டா, ஷெபாலி தாதாபாய் மற்றும் நீபா நம்பூதிரி ஆகியோர் தங்களின் தூண்டுதல் மற்றும் தடைகளைப் பற்றி மாணவியர்களிடம் பகிர்ந்தனர்.



ஹீரோஸ் அன்லிமிடெட் என்ற தலைப்பில் அண்ணாதுரை, மூர்த்தி மேகவன், சேகர், பாலாஜி மற்றும் ஹரிஹரன் போன்ற சாதனையாளர்கள் தங்களின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்தனர்.



நீர் ஏவுகணைக்கான போட்டி, ரோபோகளுக்கான கால்பந்து போட்டி, ரேடியோவால் இயக்கப்படும் ஐசி என்ஜின் பந்தய போட்டி, காகிதத்தால் ஆடை அலங்காரம் செய்யும் போட்டி, மற்றும் பல போட்டிகள் இந்நிகழ்ச்சியில் நடைபெற்றது

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...