பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
கோவை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
"நமது பாரத பிரதமர் மோடி ஜி அவர்களின் தாயார் இன்று காலை இறைவன் திருவடி சேர்ந்தார். உலகம் போற்றும் ஓர் உன்னத தேசத் தலைவனை நமக்கு தந்தவர் சுயநலமற்ற தூய்மையான எளிமையான வாழ்க்கையை கடைபிடித்து நமக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் தியாகத்திலும் தேசப்பற்றிலும் ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்து மறைந்திருக்கும் அவரது வாழ்க்கை இந்திய பெண்களுக்கு உதாரணமானது.
அவரது மறைவிற்கு பாஜக மகளிர் அணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மரியாதைக்குரிய நமது பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மன ஆறுதலை அளிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
"நமது பாரத பிரதமர் மோடி ஜி அவர்களின் தாயார் இன்று காலை இறைவன் திருவடி சேர்ந்தார். உலகம் போற்றும் ஓர் உன்னத தேசத் தலைவனை நமக்கு தந்தவர் சுயநலமற்ற தூய்மையான எளிமையான வாழ்க்கையை கடைபிடித்து நமக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் தியாகத்திலும் தேசப்பற்றிலும் ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்து மறைந்திருக்கும் அவரது வாழ்க்கை இந்திய பெண்களுக்கு உதாரணமானது.
அவரது மறைவிற்கு பாஜக மகளிர் அணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மரியாதைக்குரிய நமது பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மன ஆறுதலை அளிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.