உலகம் போற்றும் ஓர் உன்னத தேசத் தலைவனை நமக்கு தந்தவர் பிரதமரின் தாயார்- வானதி சீனிவாசன் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.


கோவை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

"நமது பாரத பிரதமர் மோடி ஜி அவர்களின் தாயார் இன்று காலை இறைவன் திருவடி சேர்ந்தார். உலகம் போற்றும் ஓர் உன்னத தேசத் தலைவனை நமக்கு தந்தவர் சுயநலமற்ற தூய்மையான எளிமையான வாழ்க்கையை கடைபிடித்து நமக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் தியாகத்திலும் தேசப்பற்றிலும் ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்து மறைந்திருக்கும் அவரது வாழ்க்கை இந்திய பெண்களுக்கு உதாரணமானது.

அவரது மறைவிற்கு பாஜக மகளிர் அணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மரியாதைக்குரிய நமது பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மன ஆறுதலை அளிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...